இலங்கை
Trending

இலங்கை கிரிக்கெட் அணியில் சனத் ஜயசூரியவுக்கு கிடைத்த உயரிய பதவி….!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சனத் ஜயசூரிய இலங்கை அணியின் உயர்மட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நியமனம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் வழங்கப்பட்டுள்ளதுடன், உயர் செயல்திறன் நிலைய ஆலோசகர் பதவி ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சமீபத்தில் ஓய்வு பெற்ற 4 இளம் வீரர்களைக் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.

உபுல் தரங்க தலைமையிலான புதெரிவுக்குழுவில் சுழற்பந்து வீச்சாளர்களான தில்ருவான் பெரேரா, அஜந்த மெண்டிஸ் மற்றும் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் தரங்க பரணவிதான ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button