இந்தியா
Trending

உச்சநீதிமன்ற தீர்ப்பால் இனி எந்த மாநிலத்தையும் துண்டு துண்டாக கூறு போடலாம்- எச்சரிக்கும் திருமாவளவன்

இந்தியா: தமிழ்நாடு

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும்; ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையின் பரிந்துரை இல்லாமலேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததும் செல்லும் என இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு கருத்துகளும் சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தொடர்பாக காரசார விவாதங்கள் நடைபெற்றன. மத்திய அமைச்சர் அமித்ஷா, திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகள் விவாதப் பொருளாகின.

இந்தத் தீர்ப்பு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது: ‘ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக உடைத்தது சரியே’ என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐவர் அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்பார்த்தபடியே இது அயோத்தி தீர்ப்பைப் போலவே அமைந்துள்ளது. எனவே, அதிர்ச்சி இல்லை. ஆனால் அச்சம் மேலிடுகிறது.

கடைசி நம்பிக்கையாகவுள்ள உச்ச நீதிமன்றத்தின் மீதான மதிப்பீடு கேள்வி குறியாகி உள்ளது. அரசமைப்புச்சட்டம் உறுப்பு எண்-370 இடைக்கால ஏற்பாடு என்பது வரலாற்று உண்மைகளைப் புதைக்கும் மாபெரும் துரோகம்.

இனி எந்தவொரு மாநிலத்தையும் துண்டுத் துண்டாகக் கூறுபோடமுடியும் என்கிற நாசகாரப் போக்கிற்கு இது வழிவகுக்கும். யாரைக் கடிந்து கொள்வது? இனி என் செய்வது? என்னும் இயலாமையே எஞ்சுகிறது. இவ்வாறு தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button