![All Sri Lanka Restaurants and Cafeteria Owners Association resolves to increase food prices](https://dhuruvan.com/wp-content/uploads/2023/12/23-65768d193d451-md.webp)
அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் உணவு விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…
மீண்டும் ஒருமுறை உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை உயர்த்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முட்டை, இறைச்சி, மீன், சீனி மற்றும் கீரி சம்பா அரிசி போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக உணவுகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக சுட்டிகாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், உணவு விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.