இலங்கை
Trending

கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை – பந்துல குணவர்தன..!!

இலங்கை

இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்செய்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டயனா கமகே கூறியிருந்தார்.

இந்நிலையில் டயனா கமகே அமைச்சரவை அமைச்சர் கிடையாது. இவ்வாறான ஓர் தீர்மானம் அமைச்சரவையில் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button