சுரங்கத்தில் கிடைத்த கல்; தங்கம் என நினைத்து வீட்டில் வைத்திருந்தவருக்கு ஷாக் – மதிப்பே வேற லெவல்..!!!
![](https://dhuruvan.com/wp-content/uploads/2023/12/goldhome1-down-1701325023.jpeg)
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஒருவர் தங்கம் தேடும் போது விசித்திரமான பாறை ஒன்றை 2015ல் கண்டுபிடித்தார். வீட்டிற்கு எடுத்துச் சென்று பல ஆண்டுகளாக அலமாரியில் வைத்திருந்தார். உள்ளே தங்கம் என்று நினைத்துக்கொண்டு பல ஆண்டுளாக் அவர் அலமாரியில் வைத்து இருந்துள்ளார்.
ஆனால் அது தங்கம் கிடையாது. தங்கத்தை விட பல மடங்கு விலை உயர்ந்த பொருள் அது என்று சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். அப்படி என்ன நடந்தது? வாருங்கள் பார்க்கலாம். டேவிட் ஹோல் என்ற அந்த நபர் ஆஸ்திரேலியாவின் கேஜிஎப் என்று அழைக்கப்படும் மேரிபரோ பிராந்திய பூங்காவில் உள்ள தங்க சுரங்க பகுதியில் 2015ல் இந்த கல்லை கண்டுபிடித்தார்.
டேவிட் அதை உடைக்க முயன்றார். அதைத் திறக்க முடியாமல் போனபோது, அடுத்த ஆறு வருடங்கள் அலமாரியில் வைத்தார். உள்ளே தங்கம் இருக்கும் எதிர்காலத்தில் உடைக்கலாம் என்று கல்லை வீட்டிலேயே வைத்துள்ளார். இடையில் பல முறை இதை உடைக்க முயன்று உள்ளார். ஆனால் அவரால் எவ்வளவு வலுவான ஆய்தம் வைத்தும் கூட உடைக்க முடியவில்லை.
அப்போதுதான் வேறு வழியில்லாமல் டேவிட் சமீபத்தில் அதை மெல்போர்ன் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். மெல்போர்ன் அருங்காட்சியகத்தின் வல்லுனர்கள் அதை சோதனை செய்த போது அந்த விசித்திரமான பாறை விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த ஒன்று என்று கூறியுள்ளனர்.
அதாவது அது ஒரு விண்கல் என்று கூறியுள்ளனர். 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு அரிய விண்கல் அது என்பர் கண்டுபிடித்துள்ளனர். அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சி செய்து வரும் புவியியலாளர் டெர்மோட் ஹென்றி, 37 வருடங்கள் இப்பகுதியில் பணிபுரிந்ததில், இரண்டு உண்மையான விண்கற்களை மட்டுமே கண்டதாக கூறி உள்ளார்.
அதில் இந்த கல்தான் பார்த்ததிலேயே மிகவும் பழமையான கல் என்று கூறியுள்ளார். இது 17 கிலோ எடை கொண்டது ஆகும். உள்ளே முழுக்க முழுக்க கார்பன், இரும்பு மற்றும் நிக்கல் நிரம்பி காணப்பட்டு உள்ளது. அவர் சூப்பர்-ஹார்ட் வைர சாவை பயன்படுத்தி அந்த கல்லை வெட்டி உள்ளார். சாதாரண வெட்டும் கருவிகள் மூலம் இதை வெட்ட முடியாது என்பதால் சூப்பர்-ஹார்ட் வைர சாவை வைத்து இதை வெற்றி உள்ளார். பூமியில் இது 200 ஆண்டுகளுக்கு முன் விழுந்து இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை ஏலம் விட்டால் இதன் மதிப்பு பல கோடிகளை தாண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.