![March 21 declared as National Seafarers Day](https://dhuruvan.com/wp-content/uploads/2024/02/24-65c25b23a9760-md.webp)
இலங்கையில் எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதியை தேசிய மாலுமிகள் தினமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடற்தொழிலாளர்களின் பங்களிப்பை மதிப்பிடுவதும் கடற்பயணத் தொழிலில் ஆர்வமுள்ளவர்களை ஈர்ப்பதும் இதன் நோக்கமாகும் உணவு,எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21 ஆம் திகதியை தேசிய மாலுமிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.