இந்தியா
Trending

நீங்க ஏன் பயப்படுறீங்க? – அண்ணாமலைக்கு கிடுக்கிப்பிடி போடும் காயத்ரி ரகுராம்…!!

தமிழ்நாடு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவீட்டர் பக்கத்தில், மணல் குவாரி முறைகேடுகள் குறித்து திமுக அரசை சாடி ஒரு டிவீட்டை பதிவிட்டிருந்தார். சென்னை உயர்நீதிமன்றம் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது மற்றும் அதுதொடர்பான வழக்கு குறித்த டிவீட்டுக்கு பதில் அளித்து அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும். ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க அரசின் இந்த கோழைத்தனமான நடவடிக்கை என்றும் ஆட்சிக்கு வந்த நாள் முதல் நமது மாநிலத்தின் வளங்களை சுரண்டிய குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற திமுகவின் நடுக்கத்தைத்தான் உணர்த்துகிறது என விளாசியிருந்தார்.

மேலும் மணல் குவாரி முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை விசாரிக்காமல் தடுக்க, திமுக அரசு முயற்சிப்பது ஏன் என்றும் தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, வேண்டுமென்றே அரசுக்கு ஏற்படுத்திய இழப்பு, அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகிவிடும் என்று திமுக அரசு பயப்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். அண்ணாமலையின் இந்த பதிவு பெரும் வைரலானது.

இந்நிலையில் அண்ணாமலையின் இந்த டிவீட்டுக்கு பாஜக முன்னாள் நிர்வாகியான காயத்ரி ரகுராம் ரியாக்ட் செய்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவீட்டில், அண்ணாமலை, மணல் மாபியாக்களின் பெயரைச் சொல்ல நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? ஒருமுறை கூட அவர்களுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. இரண்டு மாதங்களுக்கு பிறகு மணல் மாஃபியா பற்றி பேசுகிறீர்கள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு திமுக அமலாக்கத்துறைக்கு பயப்படுகிறதா என்று கேட்கிறீர்கள்?

அண்ணாமலையின் பொய்களை பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் ஏற்கனவே கூறியிருக்கிறார். அவர் உங்களை ஒரு போதும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நீங்கள் தான் நினைக்கிறீர்கள் நீங்கள் தான் தலைவன் என்று, என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button