![](https://dhuruvan.com/wp-content/uploads/2023/11/105187875-700x470.webp)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் கடந்த 10 ஆம் திகதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.
இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற நிலையில் பிரபலங்களின் பாராட்டு மழையிலும் இப்படம் நனைந்து வருகிறது. வழக்கம் போல எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில் ராகவா லாரன்ஸும் செம்மையாக நடித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி தள்ளி வருகின்றனர். அவரின் திரை வாழ்வில் இப்படம் பெஸ்ட்டாக அமைந்துள்ளதாகவும் கூறப்பபடுகிறது.
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக கடந்த 10 ஆம் தேதி வெளியான இப்படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் வேறலெவலில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி முதல் நாளை காட்டிலும் இரண்டாவது நாளிலும், அதனை தொடர்ந்து மூன்றாவது நாளிலும் இப்படத்தின் வசூல் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கு குவிந்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்களால் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.