பிரான்ஸ்
Trending

பிரான்ஸில் நடந்த கொடூரம் -பெற்ற பிள்ளைகள் மூவரை குத்திக் கொன்ற தந்தை

பிரான்ஸில் பெற்ற மகள்கள் மூவரை தந்தை குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரின் தென்கிழக்கே அமைந்த ஆல்போர்ட்வில்லே என்ற புறநகர் பகுதியில் வசித்து வரும் 41 வயதுடைய நபருக்கு 11, 10 மற்றும் 4 வயதில் மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில், 3 மகள்களையும் அவர் கத்தியால் குத்தி கொலை செய்த பின்பு தப்பியோடி விட்டார். அவர்களின் உடல்கள் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளன. சம்பவம் தொடர்ந்து,

அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், டையெப் என்ற வடக்கு கடலோர நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்ற சந்தேகநபர் 3 குழந்தைகளையும் கொன்ற விவரங்களை கூறியுள்ளார்.

இதனை கேட்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு கைது செய்யப்பட்டஅவர் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை கடந்த 2021-ம் ஆண்டு குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக குறித்த நபர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்ததாகவும் கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button