![Vijayakanth returned home after recovering from the hospital](https://dhuruvan.com/wp-content/uploads/2023/12/screenshot27397-down-1702270568.jpeg)
தமிழ்நாடு
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் இருந்து பூரண குணமடைந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.
நவம்பர் 18ஆம் திகதி தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து சளி, காய்ச்சல், இருமல் காரணமாக அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நுரையீரல் தொற்று தொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் அவர் பூரண நலம் பெற்று இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளார் என மியாட் மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.