
Shanu
நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹைபோரஸ்ட் பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று (30) பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அதன்படி, 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் தற்போது ஹைபோரஸ்ட் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவினருக்குத் தேவையான சமைத்த உணவை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.