இலங்கை
400 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

Shanu
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது 29 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 42 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திக்வெல்ல, ஊருகமுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 400 மில்லியன் ரூபாய் என்று பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.