உலகம்
Trending

முட்டையால் வந்த வினை; கேள்வியால் மடக்கிய மூதாட்டி – மன்னிப்பு கேட்ட புடின்…!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 22 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

அதோடு 2 ஆண்டுகளை நெருங்கும் போரால் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. இதனால் ரஷ்யாவில் வாழும் மக்களுக்கு சில முக்கிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக ரஷ்யாவில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம் அடுத்த பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் பல அத்தியாவசிய பொருட்களின் விலை என்பது பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக முட்டை, கோழி இறைச்சி விலை என்பது 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களிடம் திடீரென்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதாவது ஒவ்வொரு டிசம்பர் மாதமும் புடின் நாட்டு மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவார். மக்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார். அந்த வகையில் அவர் இந்த ஆண்டும் நாட்டு மக்களை சந்தித்தார். இந்த வேளையில் ஓய்வூதியம் வாங்கி வரும் இரினா அகோபோவா என்ற மூதாட்டி , முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என கவலை தெரிவித்தார்.

இதை கேட்ட விளாடிமிர் புடின், ‛‛முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இது அரசின் தோல்வியாக நினைக்கிறேன். இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பேன்’’ என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button