இலங்கை
Trending

122 தடவைகள் இலங்கை வந்த ஜேர்மன் பெண் – கட்டுநாயக்காவில் பெரும் வரவேற்பு..!!

122 தடவைகள் இலங்கை வந்த ஜேர்மன் பெண்ணுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகப்பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

1979 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 122 தடவைகள் ஜேர்மன் தேசிய சமூக சேவகியான 81 வயதான திருமதி உர்சுலா பீயர், இலங்கை வருவதற்காக 01/10 காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இவர் “சமாதானமும் கருணையும்” என்ற அறக்கட்டளையை உருவாக்கி, “குழந்தையைத் தத்தெடுத்து கிராமத்தைக் கட்டியெழுப்புவோம்” என்ற கருத்தின் கீழ் இலங்கையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ஒழுக்கம் ஆகிய துறைகளில் பல அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

அவரும் அவரது தூதுக்குழுவினரும் நேற்று காலை 05.35 மணியளவில் இந்தியாவின் மும்பையிலிருந்து சிறி லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-142 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழு மற்றும் அவரது “சமாதானம் மற்றும் கருணை” அறக்கட்டளையின் அதிகாரிகள் குழுவும் திருமதி உர்சுலா பேயர் மற்றும் அவரது குழுவினரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button