இலங்கை

வவுனியா நகரில் தொடர் விபத்துக்களை ஏற்படுத்திய சாரதி மடக்கிப்பிடிப்பு

வவுனியா நகரில் தொடர் விபத்துக்களை ஏற்படுத்திய சாரதி மடக்கிப்பிடிப்பு

வவுனியா நகரில் ஆபத்தான வகையில் காரைச் செலுத்தி தொடர்ச்சியான விபத்துக்களை ஏற்படுத்திய சாரதி இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவமானது நேற்று புதன்கிழமை (28)  இடம்பெற்றுள்ளது. 

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இருந்து காரை செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் உக்கிளாங்குளம் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.

இதன் போது வைரவபுளியங்குளம் மற்றும் நகரப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஏனைய வாகனங்களுடனும் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த காரை இளைஞர்கள் சிலர் விரட்டிச் சென்றுள்ளனர். அதிவேகமாக பயணித்த கார் பூந்தோட்டம், பெரியார்குளம் பகுதியில் வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் காரின் சாரதியை மடக்கிப் பிடித்த இளைஞர்கள், அவரை நையப்புடைத்ததுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button