Homeவிளையாட்டு

இலங்கையுடனான 2ஆவது டெஸ்டில் மிக மோசமான நிலையில் நியூஸிலாந்து

இலங்கையுடனான 2ஆவது டெஸ்டில் மிக மோசமான நிலையில் நியூஸிலாந்து

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்து நியூஸிலாந்து பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது ஒரு விக்கெட்டை இழந்து 3 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருக்கிறது.

போட்டியின் 3ஆம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 22 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து பகல்போசன இடைவேளைக்கு சற்று முன்னர் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் மைக்கல் சென்ட்னர் (29), டெரில் மிச்செல் (13), ரச்சின் ரவிந்த்ரா (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

514 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பலோ ஒன்முறையில் துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து மதிய போசன இடைவேளையின்போது ஒரு விக்கெட்டை இழந்து 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் ஓவரை வீசிய நிஷான் பீரிஸ் ஓட்டம் கொடுக்காமல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 602 ஒட்டங்களைக் குவித்து டிக்ளயா செய்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button