Breaking NewsHomeஇலங்கை
பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை - ஜனாதிபதி
பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை - ஜனாதிபதி

Shanu
நாட்டில் பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே இதனை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், குற்ற கும்பல்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களினாலேயே சமீபத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளன. அவற்றை தடுப்பதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கும் முயற்சி இடம்பெற்றுவருவது தொடர்பாகவும் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.