
Shanu
உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக பிரதமர் ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதமர் அமரசூரியவின் பெயர் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளாதாக கூறினார்.
இதேவேளை அமைச்சரவையால் நிர்ணயிக்கப்பட்ட எந்தவொரு பதவிக்கும் நியமிக்கப்பட்ட அல்லது பதவி வகிக்க பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் தகுதியை உயர் பதவிகளுக்கான குழு ஆராய்ந்து, அத்தகைய நபர்கள் குறித்து பரிந்துரைகளை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.