Homeஉலகம்

கொரோனா பெருந் தொற்றால் மூடப்பட்ட வடகொரிய நாட்டின் எல்லைகள் :திறப்பு

கொரோனா பெருந் தொற்றால் மூடப்பட்ட வடகொரிய நாட்டின் எல்லைகள் :திறப்பு

Shanu

வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது.கொரோனா பெருந்தொற்று காலத்தில் வடகொரியா நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.வடகொரியாவில் ஏற்படும் எந்தவொரு நிகழ்வும் வெளி உலகத்துக்கு தெரியாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மீண்டும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வடகொரியா அரசு முடிவெடுத்துள்ளது.ஆனால், சுற்றுலா வருபவர்களுடன் உள்ளூர் வழிகாட்டி இருக்க வேண்டும், தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு ரஷ்யாவின் 100 சுற்றுலாப் பயணிகளுக்கு வடகொரியா அனுமதி அளித்தது. தொடர்ந்து, சீனாவின் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தாண்டு அனுமதி அளித்துள்ளது.கொரோனாவுக்கு முன்பு வடகொரியாவுக்கு சுற்றுலா வருபவர்களில் 90 சதவிகிதம் பேர் சீன நாட்டினராக இருந்தனர். ஆண்டுக்கு 3 லட்சம் சீனர்கள் வடகொரியா நாட்டுக்கு சுற்றுலா சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button