சினிமா
Trending

பிக் பஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது யார் தெரியுமா ?

பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது. இந்த சீசன் துவங்கி ஐம்பது நாட்களை கடந்துள்ள நிலையில் ஸ்வாரஸ்யத்திற்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டு இருக்கின்றது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐம்பது நாட்களை நெருங்கியுள்ளது. மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் மோதல்கள் அதிகளவில் இருக்கின்றன.

அதன் காரணமாகவே ரசிகர்கள் இந்த சீசனை ஆர்வமாக பார்த்து வருகின்றனர். மேலும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற போட்டியாளராக வலம் வந்த பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது ரசிகர்களை உச்சகட்ட ஏமாற்றத்திற்கு ஆளாக்கியது. அவருக்கு ரெட் கார்டு வழங்க காரணமாக இருந்த மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோர் மீது ரசிகர்கள் உச்சகட்ட கோபத்தில் இருக்கின்றனர்.

அவர்களின் சூழ்ச்சியால் தான் பிரதீப் வீட்டை விட்டு வெளியேறினார் என பேசி வருகின்றனர். இந்நிலையில் மாயா இரண்டாவது வாரமே குறைவான வாக்குகளை பெற்று வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் இல்லை என்பதால் அவர் தப்பித்தார். அதைப்போல பூர்ணிமா கடந்த வாரம் வெளியேறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால் ஐஷு வெளியேறிவிட்டார். எனவே இந்த வாரம் பூர்ணிமா தான் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறும் போட்டியாளராக இருப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கானா பாலா தான் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறுகிறார் என தகவல்கள் வருகின்றன. கானா பாலா வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

இதுவரை இரண்டு வாரங்களை கடந்துள்ள கானா பாலா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் இடம் தெரியாமல் தான் இருந்து வருகின்றார். அதன் காரணமாகவே ரசிகர்கள் அவரை எலிமினேட் செய்திருக்க கூடும் என கணிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த வாரமாவது பூர்ணிமா வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்.

இருப்பினும் பூர்ணிமா வெளியேறிவிட்டால் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால் அவர் இந்நிகழ்ச்சியில் தொடர வேண்டும் என ஒரு சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் இருக்க கூடாது, அவரால் தான் பிரச்சனைகள் மற்றும் சண்டைகள் வருகின்றன. எனவே அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஒரு சில ரசிகர்கள் சொல்கின்றனர்.

இதையடுத்து விசித்ரா மற்றும் அர்ச்சனா தான் ரசிகர்களின் பேராதரவை பெற்று அதிக வாக்குகளை குவித்து முதல் இடத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button