இலங்கை
Trending

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு தொலைபேசி இலக்கம்…!!

இலங்கையில் 10 வீதமான ஆண்களும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை குடும்ப சுகாதார பணியகத்தின் மகளிர் சுகாதார பிரிவின் திட்ட முகாமையாளர் திருமதி நெத்யாஞ்சலி மாப்பிட்டிகம தெரிவித்தார்.

இந்நிலையில் குடும்ப வன்முறைகளை முறைப்பாடு செய்வதற்கு ‘மிது பியச’ பிரிவில் 24 மணி நேரமும் செயற்படக் கூடியதான தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

070 2 611 111 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் குடும்ப வன்முறை தொடர்பில் எந்த நேரத்திலும் தெரிவிக்க முடியும் என பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button