இந்தியா
Trending

வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து கதறி அழுத பெண்கள் – கட்டியணைத்து ஆறுதல் கூறிய பிரேமலதா!

தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். இந்நிலையில் கடந்த 17, 18 மற்றும் 19 ஆகிய 3 நாட்கள் தென்மாவட்டகளில் கனமழை விளாசியது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மழை நீர் இன்னும் வடியவில்லை. தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய குழுவும் தென் மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பியதற்காக சிறப்பு பூஜைகள்

முதல்வர் ஸ்டாலின் நேற்று தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் வழங்கினார். இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் இரண்டாவது நாளாக சென்று மக்களை சந்தித்தார். நேற்று முன்தினம் திருநெல்வேலி, தூத்துக்குடி, பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிரேமலதா பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் திருநெல்வேலி டவுன் பகுதி மக்களுக்கு ஐந்தாயிரம் பேருக்கு பிரியாணி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார். இரண்டாவதாக நாளாக நேற்று சந்தித்து ஆறுதல் கூறி உதவிகளை வழங்கினார். அப்போது உடைமைகளை இழந்து தவித்த பெண்கள் பிரேமலதாவை பார்த்து கதறி அழுதனர். அவர்களை கட்டியணைத்து ஆறுதல் கூறினார் பிரேமலதா விஜயகாந்த். அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button