உலகம்
Trending

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகல கொண்டாட்டம் – இஸ்ரேல் போரால் களையிழந்த இயேசுவின் பிறப்பிடம்..!!

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நள்ளிரவு 12 மணி தொடங்கி, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. உலக அமைதிக்காக தேவ மைந்தனிடம் மக்கள் பிரார்த்தனை செய்தனர். இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர், உக்ரைன்-ரஷ்யா போர், உலக பொருளாதாரம், கோவிட் தொற்று, சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் தாக்குதல், ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள், சாதிய, மத, இன மோதல்கள் என இந்த ஓராண்டில் ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

இந்நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்நிலையில், புத்தாண்டுக்கு முன்னோட்டமாக இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் இயேசு கிறிஸ்து பிறந்ததாக கருதப்படும், பெத்லகேமில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளதாக அங்குள்ள தேவாலய பாதிரியார்கள் கூறியுள்ளனர். மேலும், இன்று இயேசு பிறந்திருந்தால், அவர் காசாவில் இடிபாடுகளுக்கு அடியில் பிறந்திருப்பார் என்று, காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள குழந்தைகள் குறித்து பாதிரியார்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 7ம் திகதி தொடங்கியா இஸ்ரேல்-ஹமாஸ் போரில் தற்போது வரை சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பாஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button