உலகம்
Trending

டிரம்புக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்…!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான நாடாளுமன்ற வன்முறை வழக்கில் தீர்ப்பளித்த கொலராடோ மாகாண நீதிமன்றம் அவர் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என தெரிவித்துள்ளது.

மேலும் கொலராடோ மாகாணத்தில் அவருடைய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் டிரம்ப் பெயர் இடம்பெறாது.

அவ்வாறு இடம் பெற்றிருந்தால் வாக்குகள் எண்ணப்படாது என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் டிரம்புக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து நீதிபதிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகளை சுற்றி கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதுத் தொடர்பில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு விசாரணை குறித்த விளக்கத்தை அவர்கள் வெளியிடவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button