இந்தியா
Trending

புலி வேட்டைக்கு போறோம்..எலி வேட்டைய பத்தி பேசாதீங்க – ஓபிஎஸ் ஐ கலாய்த்த செல்லூர் ராஜு…!!

இந்தியா: தமிழ்நாடு

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ஒன்றில் தமிழக முதல்வர் ஸ்டாலினையும், தமிழக அரசையும் அவதூறாகப் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ மீது அவதுாறு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி குற்றவியல் அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் செல்லூர் ராஜூ நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் முன்னாள் செல்லுார் ராஜூ நேற்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சிவகடாட்சம் முன்பு நேரில் ஆஜரானார். அப்போது வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 21 தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், “நான் ஆர்ப்பாட்டத்தில் உண்மையை தான் கூறினேன். ஆனால் என் மீது வழக்கு போட்டுள்ளார்கள். நான் பொதுவாழ்வுக்கு வரும் போது திமுக தொடர்ந்த கொலை வழக்கிலேயே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அந்த வழக்கில் குற்றமற்றவன் என நிரூபித்து விடுதலையானவன். அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. பொதுவாழ்க்கைக்கு வந்தபின்பு வழக்குகளை பார்த்தெல்லாம் அதிமுககாரர்கள் பயப்பட மாட்டார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக சின்னம், கொடி, லெட்டர்பேட் ஆகியவற்றை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு, “நாங்கள் புலி வேட்டைக்கு செல்கிறோம். எலி வேட்டையை பற்றி பேசாதீர்கள்!விடப்பா நீ வேற” என செல்லூர் ராஜூ கிண்டலாகத் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button