சினிமா
Trending

‘அயலான்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி; இரண்டாம் பாகம் ரெடி – அதிரடி முடிவெடுத்துள்ள சிவகார்த்திகேயன்…!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்து தற்போது தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு வெற்றிகரமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். முன்னதாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் இவரின் நடிப்பில் ‘மாவீரன்’ படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 21 வது படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதனிடையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அயலான்’ படத்தினை ரிலீஸ் செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்தது. ‘இன்று நேற்று நாளை’ பட இய்க்குனரித்ன் இரண்டாவது படைப்பாக உருவான படம் தான் ‘அயலான்’. கொரோனாவிற்கு முன்பாகவே துவங்கப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்தது.

தொடர்ந்து ‘அயலான்’ படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டு கொண்டே இருந்தது. ஆனாலும் இப்படம் மீது ரசிகர்கள் நம்பிக்கையுடன் வெறித்தனமான காத்திருப்பில் இருந்தனர். இந்நிலையில் ஒரு வழியாக இந்தாண்டு பொங்கல் ரிலீசாக வெளியானது ‘அயலான்’. ஏலியன் சயின்ஸ் பிக்சன் ஜானரில் வெளியாகி பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அமோகமான வரவேற்பினை பெற்று வருகிறது இப்படம்.

குறிப்பாக குழந்தைகளை ‘அயலான்’ படம் மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. இந்நிலையில் ‘அயலான் 2’ படத்தினை இயக்குவதற்கு தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்ட் 2 வில் விஎப்எக்ஸ் பணிகளுக்காக மட்டும் சுமார் 50 கோடி ஒதுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அயலானை விட இரண்டாம் பாகத்தில் விஎப்எக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்கே 21’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் இராணுவ வீரராக நடிப்பதாக கூறப்பபடுகிறது. இதனையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையில் ‘அயலான் 2’ படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button