இலங்கை

மின்னேரியாவில் ஆற்றில் வீழ்ந்து பெண் பலி

மின்னேரியாவில் ஆற்றில் வீழ்ந்து பெண் பலி

அநுராதபுரம், மின்னேரியா நகரத்தில் ஆற்றில் வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பெண், மின்னேரியா நகரத்தில் உள்ள ஆற்றில் தவறி வீழ்ந்துள்ள நிலையில் சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் நீரில்  அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த பெண்,  மின்னேரியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் கண்பிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் அவர் ஏற்கனமே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button