இலங்கை
Trending

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது..!!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்று (16) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டம், பேசாலையை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

கைதான 18 கடற்றொழிலாளர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு ட்ரோலர் படகுகளும் கடற்படையினரால் தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டுவரப்பட்டன.

அதன்பின்னர் 18 கடற்றொழிலாளர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இன்று (17) மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button