
Shanu
தளபதி விஜய் நடிப்பில் இருந்து விலகும் நிலையில் இவரது மகன் ஜேசன் சஞ்சய் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு இயக்குனராக களமிறங்க இருக்கின்றார். அதற்கான படிப்புகளை எல்லாம் படித்து ஒரு இயக்குனராகும் தகுதியை வளர்த்துக்கொண்டு களமிறங்கி இருக்கின்றார்.
லைகாவின் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் தன் முதல் படத்தை இயக்கவிருப்பதாக கடந்த 2023 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து அவர் இயக்கும் முதல் படம் எப்படி இருக்கும், எந்த ஜானரில் இருக்கும், ஹீரோ யாராக இருப்பார் என்பது போன்ற பல கேள்விகள் எழுந்தன.
விஜய் சேதுபதி, கவின், சூரி, துருவ் விக்ரம் என பலர் ஜேசன் சஞ்சய்யின் படத்தில் ஹீரோவாக நடிப்பார்கள் என சொல்லப்பட்டது. அதன் பிறகு பல மாதங்கள் இப்படத்தை பற்றி எந்த ஒரு பேச்சும் இல்லை. இடையில் இப்படம் கைவிடப்பட இருப்பதாக கூட வதந்திகள் பரவின. ஆனால் மிக பொறுமையாக தன் வேலைகளை செய்துகொண்டு காத்துகொண்டு இருந்தார் ஜேசன் சஞ்சய்.
அவரின் பொறுமைக்கு தற்போது பலன் கிடைக்க துவங்கியிருக்கிறது. கடந்தாண்டு நவம்பர் மாதம் ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிப்பதாகவும், தமன் இசையமைப்பதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றதாகவும், நினைத்ததை விட படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும் கண்டிப்பாக இப்படம் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் சந்தீப் கிஷன். இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் நாயகி பற்றியும் மற்ற நடிகர்கள் பற்றியும் இன்னும் தகவல் வெளியாகவில்லை என்றும் கூறியுள்ளார்.